சந்தைகளில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவிய போது, இந்நாட்களில் தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பெப்ரவரி மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கலாம் என அவர் கூறினார்.