ஓமானில் இருந்து இலங்கை திரும்பிய 14 பெண்களில் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமானில் பணிக்கு புறப்பட்டு ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு இன்று (16) இலங்கை வந்த 14 பெண்களில் ஒருவர் விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமான் சுரக்ஸா இல்லத்தில் இருந்து இன்று வந்த 14 பெண்கள் உட்பட இதுவரை 32 பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.