கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 4.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு-01, கொழும்பு-02, கொழும்பு-03, கொழும்பு-04, கொழும்பு-07, கொழும்பு-09, கொழும்பு-10 மற்றும் கொழும்பு-11 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.