கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்துக்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றில் இன்று (ஜன 03) உணவு விஷமானதால் பாதிக்கப்பட்ட 114 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை அந்த நிறுவனம் வழங்கிய உணவை உட்கொண்ட பின்னர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகயீனமடைந்த ஆடைத் தொழிலாளர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.