Date:

தாய் செலுத்திய முச்சக்கர வண்டி பஸ்ஸுடன் விபத்து; மகள் பலி

பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஏழு வயது சிறுமி பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் உள்ளிட்ட மூன்று பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கஹட்டரூப்பவில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் அம்பிட்டிய பகுதியிலிருந்து முத்துமால பகுதிக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் அம்பிட்டிய சந்தியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திய பெண் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பலியாகியுள்ள சிறுமியின் தாயாரே முச்சக்கர வண்டியின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் உட்பட மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணித்த சிறுமி முத்துமால கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பேருந்தின் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...