இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும் நியூஸ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கொரோனா அச்சத்திலும் இலங்கை உட்பட உலக வாழ் கிறிஸ்தவர்கள் நள்ளிரவு தேவ ஆராதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியை பேணி பாதுகாப்பாக நத்தார் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும்.
2022 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசுவின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கிறோமா? என்பது பணிவான அபிப்பிராயமாகும்.