Date:

பேராதனை முன்னாள் உப வேந்தர் மீது தாக்குதல்; 12 மாணவர்களுக்கும் ஜனவரி 04 வரை வி.மறியல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அத்துல சேனாரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கும் எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 10ஆம் திகதி சனிக்கிழமை இரவு , பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மீதும் அவரது வீட்டின் மீதும் மாணர்கள் சிலரால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது மகனின் கார் மோதியதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் ஏற்பட்டட வாக்குவாதத்தை தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் 12 பல்கலை மாணவர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் கடந்த டிசம்பர் 12ஆம் திகதி 6 மாணவர்கள் பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதோடு, ஏனைய 6 மாணவர்களும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம்…

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற...

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் ஆட்டநிர்ணய சர்ச்சை!

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் மற்றும் ஊழல் இடம்பெறுவதாக சுமத்தப்பட்ட...

ராஜித்தவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன்...

அதிரடியாக குறைந்த தங்க விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள்...