Date:

இந்திய இராணுவ படைதளத்தில் பணியாற்றிய இருவரின் மரணத்திற்கு எதிராக போராட்டம்

இந்திய இராணுவ படைதளத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றிய இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கஷ்மீர் பிராந்தியத்தின் பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த இந்திய இராணுவத் தளத்தில் இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இந்திய நிர்வாக பகுதியான காஷ்மீர் வழியாக செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதியை மறைத்து இந்த ஆர்ப்பாட்டதை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகருக்கு தெற்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய படைதளத்தின் நுழைவாயிலுக்கு முன்னதாக இராணுவ பாதுகாவலாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஜோரியில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்வத்தில் சுரிந்தர் குமார் மற்றும் கமல் கிஷோர் என்பவர்களே உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இச் சம்பவத்தில் மூன்றாவது நபர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் இடம் பெற்று சில மணித்தியாளங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தும் இராணுவத் தளத்தின் மீது கற்களை வீசியும் போட்டத்தை முன்னெடுத்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SOURCE: AL JAZEERA AND NEWS AGENCIES

Protesters block Kashmir highway after two shot dead at army camp | Conflict News | Al Jazeera

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...