Date:

மேலும் சில அத்தியவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (21) முதல் மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், சிவப்பு பருப்பு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு 378 ரூபாவுக்கும், 425 கிராம் உள்ளுர் ரின் மீன் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 480 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 15 ரூபாவினாலும், நெத்தலி கருவாடு (தாய்) 50 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், காய்ந்த மிளகாயின் புதிய விலை 1,780 ரூபா எனவும், நெத்தலி கருவாடு  1,110 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய...

சமபோஷா கைது

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவராக நம்பப்படும் 'சமபோஷா' என அழைக்கப்படும்...

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...