Date:

இந்தியாவில் பாரிய தீ விபத்து : நகைக்கடை உரிமையாளரின் குடும்பம் தீயில் கருகியது

இந்தியாவில்  உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் நேற்று (29) மாலை கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நகைக் கடை உரிமையாளர் ஒருவர் அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேருடன் ஜஸ்ரானா பகுதியில் உள்ள பதம் நகரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீரென அவரது வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்  18 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மின் ஒழுக்கு காரணமாக  தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...