Date:

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவை! அரசு வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாது ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புடவை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் வேறும் ஆடைகளை அணிந்து பாடசாலை செல்ல நேரிட்டுள்ளதாக ஆசிரியைகள் விசனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இவ்வாறான வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகளை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும் புடவை அணிந்து செல்வதனால் ஏற்படக் கூடிய செலவினை தவிர்க்கவே சில ஆசிரியைகள் வேறும் ஆடைகளை விரும்புகின்றார்கள் போலும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...