Date:

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு – கிரான்பாஸ் – நவகம்புர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

”மன்ன கண்ணா” என்றழைக்கப்படும் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் மீதே, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர், பாதாள உலக குழுவின் உறுப்பினரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...