இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பெங்குலு (Bengkulu) பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் கரையோர மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.