இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திங்கட்கிழமை (14) சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியின் பிரகாரம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கீழ் 1283 நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 29 அமைச்சகங்கள் மற்றும் 99 அரசு துறைகள் என்று பட்டியல் வெளிப்படுத்துகிறது.
25 மாவட்டச் செயலகங்கள், 09 மாகாண சபைகள், 341 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்தது.