தீவுகள் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கிய்ரன் பொலார்ட் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 2023 தக்கவைப்பு ஏலத்தில் இருந்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் பட்டியலில் இருந்து விடுவித்ததைத்தொடர்ந்து, அவர் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.எல்.ரி. லீக் அணியான மும்பை எமிரேட்ஸின் வீரராக அவர் தொடர்வார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தனது முகநூல் புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் எப்போதும் சிறந்த இருபதுக்கு 20 வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. துடுப்பாட்டம் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான அசுரன்.
நீங்கள் பும்பாய் இந்தியன் அணியிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள். நான் உங்களுடன் விளையாடுவதை மிகவும் ரசித்துள்ளேன்.
உங்கள் கிரிக்கெட் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு எனது நல்வாழ்த்துக்களும். உங்களின் வழிகாட்டுதலின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் நிச்சயமாக வலுப்பெறும் என பதிவிட்டுள்ளார்.”