Date:

போதைக்கு அடிமையான கைதி..! தண்ணீர் தாங்கியில் விழுந்து மரணம்

வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தண்ணீர் தாங்கியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 56 வயதான சாஹூல் ஹமீட் சபர்டீன் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதைப் பொருள் சம்பந்தமான குற்றத்திற்காக ஒன்றரை மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்த கைதி சிறைச்சாலையில் எஃப் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடுமையாக போதைப் பொருளுக்கு அடிமையான இந்த கைதி, சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து உணவு சாப்பிடவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த தினத்தில் இரவில் உறங்காது, கைதி தண்ணீர் தாங்கியில் அமர்ந்து இருந்ததை கண்ட வேறொரு கைதி ஒருவர், திரும்பி வரும் போது, அந்த கைதி தண்ணீர் தாங்கியில் விழுந்து கிடப்பதை கண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரி கைதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...