Date:

முல்லைத்தீவில் 63 வயது முதியவரை காதலித்த 23 வயது இளம் பெண் – மூவர் கைது

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்த முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த நேற்று முன் தினம் முல்லைத்தீவு பொலீசாரால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

23 வயது பெண்ணும் 63 வயதான முதியவருக்கும் ஏற்பட்ட காதல்.. காதலியை கடத்த முயன்றார் என குறிப்பிடப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவரும், தாக்கிய இருவரும் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவருக்கு சில மாதங்களின் முன்னர் திருமணம் நடந்தது. எனினும், சிறிது காலத்தில், குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டது.

தனது 23 வயதான மனைவிக்கும், மனைவியின் நெருங்கிய உறவினரான 63 வயதான தாத்தா முறையான நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருப்பதாக கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சுமார் ஒரு மாதத்தின் முன்பாக அவர் முறைப்பாடு செய்திருந்தார். கனடாவில் வசித்த அந்த முதியவர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் பிறிதொரு பகுதியில் வசிப்பவர்.

கனடாவில் நீண்டகாலம் வசித்தவர், தற்போது முல்லைத்தீவில் வசித்து வருகின்றார் பொலிசார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்த போது, 63 வயதான காதலனுடனேயே வாழப் போவதாக தெரிவித்தார்.

எனினும், பொலிசார் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறினர். அத்துடன், பெற்றோர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர். கடந்த ஒரு மாதமாக வெளித்தொடர்புகள் இல்லாமல் அந்தப் பெண், வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருந்தும் அந்தப்பெண்ணுக்கு தாத்த நகைகள் பணம் என பல உதவிகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 05.11.22 இரவு அந்த பெண்ணை கடத்திச் செல்ல வந்ததாக குறிப்பிட்டு, வாகனமொன்றை சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகன சாரதியையும் நையப்புடைத்தனர்.

கனடா வாசியின் ஏற்பாட்டில் பிறிதொருவர் வாகனத்தில் வந்து அந்த பெண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டதாக, பெண்ணின் உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாடகைக்கு பெறப்பட்ட வாகனமொன்றையே அந்த நபர் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலிற்குள்ளான வாகன சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 06.11.22 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373