Date:

பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் ஹரின்?

பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையிலான சமூக இயக்கத்தில் இணைந்துகொள்வது குறித்து சிந்தித்து வருவதாக அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் முடிவிற்கு வந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்துவிட்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருஜெயசூரிய விக்டர் ஐவனின் சமூகநீதிக்கான தேசிய இயக்கம் சிறந்த ஒரு விடயத்திற்காக குரல்கொடுக்கின்றது என நான் கருதுகின்றேன் அவர்கள் சமீபத்தில் தங்கள் திட்டங்களை எங்கள் முன் தெளிவுபடுத்தினார்கள் முன்னோக்கி செல்வதற்கு அதுவே சிறந்த வழி என கருதுகின்றேன் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நான் எனது அரசியல்வாழ்க்கையிலிருந்து வெளியேறி அதில் இணைய விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியலின் முழு கருத்தும் பிழையானது அது இனம் மதம் என பிளவுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளதுடன் நாங்கள் பிளவுபட்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுயநலம் மிக்கவராக காணப்படுகின்றார் ஜனாதிபதியாக பதவியேற்பது குறித்து உறுதியாகவுள்ளார் என ஹரீன் பெர்ணாண்டோ சாடியுள்ளார்.

இது சுலபமில்லை நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு காரணமான நபரின் முகத்தை மாத்திரம் நீங்கள் மாற்றுகின்றீர்கள் என தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணாண்டோ சஜித் பிரேமதாச இன்னுமொரு குழப்பமாக மாறுவார் அமைப்புமுறையை மாற்றுவதே அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...