Date:

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்

கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் வட மாகாணத்தில் 485 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்

மேலும் 2021 ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறைந்துள்ளதாகவும், ஆனால் 2022 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி சென்றுள்ளதாகவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் வேலைகளை இழந்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் மாகாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு வேலை தேடிச் செல்வதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...