Date:

160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கைக்கு அத்தியாவசியமான 383 வகையான மருந்துகளில் தற்போது சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டி.ஆர்.கே. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதய நோயாளிகளுக்கான மருந்துகள் அவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

383 மருந்துகளில் சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்த நேரத்தில் இந்த மருந்துகளை எமக்கு இருந்தால் நல்லது.

இதய பிரச்சனைகளுக்கு நாக்கிற்கு அடியில் வைக்க மாத்திரை ஒன்று உள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குள் ஒரு தொகுதி மாத்திரைகளையாவது கொண்டு வர வேண்டும்.

மாரடைப்புக்குக் கொடுக்கப்படும் இன்னொரு மருந்து இருக்கிறது, குறித்த மருந்தும் தற்போது குறைவடைந்து கொண்டு வருகிறது.இன்னொரு தடுப்பூசி இருக்கிறது. இந்த 3 மருந்துகளையும் விரைவில் கொண்டு வர வேண்டும்.- என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...