Date:

இரண்டு வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வது பாரிய குற்றம்- கீதா குமாரசிங்க

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடை செய்யும் வகையிலான சட்டத்தை மீள கொண்டு வருவதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிக்கின்றார்.

தற்போது இரண்டு வயது நிறைந்த குழந்தைகளின் தாய்மாருக்கு வெளிநாடு செல்ல அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியானது, பிரச்சினையானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதனால், குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இரண்டு வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வது பாரிய குற்றம் எனவும் அவர் கூறுகின்றார்.

குழந்தைக்கு ஐந்து வயது நிரம்பும் வரை தாய்மார்கள், குழந்தைகளுடன் இருப்பது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குழந்தைகளை, குடும்பத்தாரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதனாலேயே, ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜயின் இறுதி படத்தின் பாடல் வெளியானது (VIDEO)

தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்...

2026 ஹஜ் முகவர் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரீட் மனு தாக்குதல்

ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர் பட்டியலுக்கு...

காலியில் பெருந்தொகை ஹெரோயினுடன் 3 பேர் கைது

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன்...

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...