Date:

பெண் ஆசிரியை துஷ்பிரயோகம் செய்த ஆண் ஆசிரியர் – கொழும்பில் சம்பவம்

பெண் ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆண் ஆசிரியர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவிடம் ,கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“அவர் அந்த ஆண் ஆசிரியருடன் கிளப் ஒன்றிற்குச் சென்றதாகவும், அன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாததால், ஆண் ஆசிரியருடன் விடுதிக்கு சென்றதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அப்போது தான் குடிபோதையில் இருந்ததால் தனக்கு நடந்த எதுவும் தெரியவில்லை என்றும், ஆண் ஆசிரியர் தனது அனுமதியின்றி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்தவர் நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...