Date:

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி – மேலும் இருவர் காயம்

வடுகுடா ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் கட்டின பிங்கம் பெரஹெரவில் தீப்பந்தம் சுழற்றச் சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடங்கொட,பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் தொடங்கொட, ஹர்மன்வத்தை, கட்டம் 1 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிஹான் கவிது விக்கிரமரத்ன என்ற இளைஞரே எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்த இளைஞர் கட்டின பெரஹெராவில் தீப்பந்தங்களை சுழற்றிக்கொண்டிருந்தார்.

தீப்பந்தங்கள் பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தகடு தரையில் விழுந்து, அது மின்சார வயரில் சிக்கியதாகவும், அதனை மீண்டும் எடுக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் ஏனைய இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...