Date:

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்- டயனா

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்றைய தினம் (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை செய்ய வேண்டுமாயின் எனக்கு நிறுவனங்களை ஒதுக்கி உரிய பொறுப்புக்களை வழங்க வேண்டியது அவசியம். ஒரு நபரோ அல்லது இரண்டு நபரோ அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருந்தால், திறமையாக பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

அப்படி நடந்தால், வைக்கோலை நாய் உண்பதுமில்லை, உண்ணும் மாட்டுக்கும் கொடுப்பதில்லை என்ற நிலைமையே ஏற்படும். இதன் காரணமாகவே அதிகாரங்களை வழங்குமாறு நான் அதிபர் ரணிலிடம் கோரினேன் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குதல் மற்றும் இரவு பொருளாதாரம் தொடர்பிலும் டயனா கமகே மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.பல நாடுகளில் இரவு பொருளாதாரம் 70 வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் டொலர்களை செலவிட வேண்டுமாயின் அவர்களுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் இருக்க வேண்டும். சாப்பிடவும் குடிக்கவும் நடனமாடவும் தேவையான சூழல் இருக்க வேண்டும். இரவு 10 மணியுடன் அனைத்தையும் முடிவிடுவது சரியாக இருக்காது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...