Date:

திரவ மருந்துகளால் மேலும் 100 குழந்தைகள் மரணம்!! அதிர்ச்சி செய்தி

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் திரவ மருந்துகளால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் சிரப் மற்றும் திரவ மருந்துகள் விற்பனையை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் சிரப் வகையினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய அதிகாரிகள் குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், சிரப் ஒன்றில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 99 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மருந்து உள்ளூர் தயாரிப்பா அல்லது வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தோனேசிய அதிகாரிகள் 200 குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு பல்வேறு சிறுநீரக கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எதிர்க்கட்சித் தலைவரின் மே தின வாழ்த்துச் செய்தி

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கட்சி எதிர்க்கட்சி வேறுபாடின்றி நாம்...

பிரதமரின் தொழிலாளர் தினச் செய்தி!

அரச, தனியார், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தின்...

ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி!

சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக...

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்

இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373