Date:

பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை செலுத்த சிரமப்படும் அதிபர்கள்

சில பாடசாலைகளின் குடிநீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபை இறுதி அறிவித்தல் விடுத்துள்ளதாகவும், பாடசாலைகளுக்கு குடிநீர் கட்டணத்தை வழங்க அதிபர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதுவரை பாடசாலைகளில் குடிநீர் கட்டணத்தை அறவிடவில்லை எனவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கட்டணம் அறவிடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பாடசாலைகளில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்படும் என்றார்.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து குடிநீர் கட்டணத்தை நிலுவையுடன் செலுத்துமாறும், 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்புடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளுக்கு வழங்கப்படும் குடி நீருக்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை சுமார் 26 மில்லியன் ரூபாவை செலவழிப்பதாகவும், ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை 12 மில்லியன் ரூபாவை பாடசாலைகளிடமிருந்து நிவாரணத் தொகையை எதிர்பார்ப்பதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...