Date:

தோண்டி எடுக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் அடக்கம்

மட்டக்களப்பில் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட இளைஞரின் உடல் நேற்று(17) கல்லியங்காடு கத்தோலிக்க மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த வருடம் ஜுன் மாதம் 03ஆம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸ் காவலிலிருந்த போது உயிரிழந்திருந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைகள் முடிவுற்று மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படிருக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் உடல் மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டு நேற்று(17) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நாளை(19) மீண்டும் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...