Date:

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது காணாமல் போன மாணவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் கடவத்த-கனேமுல்ல பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குப் பின்னரான சூழலுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாததாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாததாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாத வகையில் பாடப்பிரிவுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...