Date:

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று (4) ஹிக்கடுவ பிரதான பாடசாலை மைதானத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் 29 வயதுடைய பெண் எனவும், அவரிடம் 8 கிராம் 229 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்கம முகாமின் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பெண் ஒருவருடன் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த பெண் நீண்டு காலமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...