Date:

சமுர்த்தி திட்டங்களுக்கும் QR குறியீடு அறிமுகம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு தகுதியான பெறுநர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண அரசாங்கம் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் என்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் QR குறியீடு முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் சமுர்த்தி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற சமூக நலத் திட்டங்களை சீரமைக்க QR குறியீடு முறைமையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் விபரங்கள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள், அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் கணினிமயமாக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு கியு ஆர் குறியீடு ஒதுக்கப்படும். இந்த செயல்முறை அக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கிராம அலுவலர் பிரிவு கள அலுவலர்கள் கையடக்கதொலைபேசி ஊடாக விண்ணப்பத்தில் தரவுகளை சேகரித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு QR குறியீடு அடங்கிய ஆவணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சுமார் 3.9 மில்லியன் குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் உதவிகளை பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...