Date:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை சம்பாதிப்பதற்காக யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் எப்போதும் இப்படியான அரிசி மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது பிள்ளைகளுக்கு உணவை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறினார்.

இலங்கை எப்போதும் இப்படி அரசி தட்டுப்பாடும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கோதுமை மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என்றும் தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடி என்ற பிரச்சினை மக்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கூறினார்.

அதேசமயம் ஒரு புறம் போதைப் பொருள் வியாபாரம் பாரதூரமான அளவில் பெருகி வருகிறது. அந்த வியாபாரத்தை ஒழிக்க அரசாங்கம் வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறை்படுத்துவதாக தெரியவில்லை என்றும் மைத்திரி இதன்போது சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Justin அமெரிக்காவுடன் இனிப் பேசி அர்த்தமில்லை -ஈரான்

இஸ்ரேலின் “அநாகரிகமான” தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி...

வாழைச்சேனையில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும்,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373