Date:

தென் கொரியா, ஜப்பானில் தொழில் பெற்றுக்கொடுக்கும் பண மோசடி வெளியானது

தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.

இளைஞர், யுவதிகளை தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவதாக தெரிவித்து, குருநாகல் நகரின் பிரதான இடமொன்றில் இந்த நபர்கள் பண சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக நபரொருவரிடமிருந்து முற்பணமாக 1500 ரூபாவை இந்த நபர்கள் அறவிட்டு வந்துள்ளனர்.

இதன்படி, குறித்த இடத்திலிருந்து 77000  ரூபா பணம் மற்றும் மேலும் சில பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு லட்சம் ரூபா வீதமான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் உணவின்றி 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு...

ரணிலின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில்...

வவுணதீவு படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...