Date:

அதிகரிக்கிறது மின்வெட்டு நேரம் – புதிய அட்டவணை விரைவில்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளது.

இதனால், இன்று முதல் மின்தடை அமுலாகும் நேர இடைவெளி நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பான புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய்யின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.

“லக்ஷபான நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு, டீசல் மற்றும் உலை எண்ணெய் கொள்வனவுக்கான போதிய அளவு நிதி மின்சார சபையிடம் இன்மை மற்றும் நீர் மின் முகாமை ஆகிய காரணங்களால் மின்வெட்டை நீடிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

எனினும், இலங்கை அதிகாரிகள் தவறான வகை மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ததால் தினசரி மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய்யில் உள்ள உலை எண்ணெய் அதிக அளவு கந்தகத்தை கொண்டுள்ளது என்றும் அதனை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது” என்றும் ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

புதிய கையிருப்பு மசகு எண்ணெய் மின்சார சபையினால் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த ஜனக்க ரத்னாயக்க, அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அதனை இப்போது தான் குடிக்கவும் முடியும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 ஆவது இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு மேலும் நீடிக்கலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373