Date:

வேதனத்தை மக்களுக்காக பகிர்ந்தளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருடங்களுக்கான வேதனம் உள்ளிட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையும் மீண்டும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் மற்றும் வேதனத்தை இவ்வாறு மீண்டும் வழங்கவுள்ளதாக மாத்தறை – அக்குரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு இணங்கவே தாம் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுமார் 120 இலட்சம் ரூபாவினை மாத்தறை மாவட்டத்தில் இயங்கும் 220 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373