Date:

அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை கொலை செய்த மனைவி

கணவன் மீது அமில தாக்குதல் மேற்கொண்டு கணவனை படுகொலை செய்தார் என குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் மனைவியான பெண் சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

அகலவத்தை பகுதியில் அமில தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அப்பகுதியை சேர்ந்த 42 வயதான குடும்பஸ்தர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சகோதரி தனது சகோதரனை, சகோதரனின் மனைவி, மனைவியின் சிறிய தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரே படுகொலை செய்தனர் என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அவரது வாக்கு மூலத்தின் பிரகாரம் உயிரிழந்தவரின் மனைவியான 38 வயதான சட்டத்தரணி, மனைவியின் சிறிய தந்தையான 68 வயதுடைய நபர் மற்றும் சகோதரனான 36 வயதுடைய நபர் ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது உயிரிழந்த நபர் தனக்கு தானே அமிலத்தை ஊற்றிக்கொண்டார் என மூவரும் தெரிவித்துள்ளனர்.

மூவரிடமும் தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யூடியூபர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதா சிஸ்டம் சேன்ஞ்ச்?

நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாக முறையாக முன்னெடுக்கப்பட...

“ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது”

“ வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்....

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.   அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர்...

பொரலஸ்கமுவ துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிப்பு

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை...