Date:

அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

அத்தியாவசியமற்ற  அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை  மனித வளம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு  ஏனைய சில நிறுவனங்களில் மேலதிகமாகவுள்ள ஊழியர்களை  சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனை தெரிவித்தார்.

இதேவேளை அரச  ஊழியர்களை சேவையில்  நியமிப்பது தொடர்பில்  மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  அரச சேவைவயை  முறையாகவும் செயற்பாட்டு ரீதியாகவும்  உயர்ந்த மட்டத்தில் கொண்டு நடத்துவதற்காக  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இவர் தெரிவித்தார்.

அதன்படி  சில நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...