Date:

சிகிரியா கோட்டை அல்ல பூங்கா! சுற்றுலாத்துறை அமைச்சின் சர்ச்சைக் கருத்து!

சிகிரியா ஒரு கோட்டை அல்ல எனவும், அதனை பூங்காவாக பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்,

“சிகிரியாவை சுற்றுலா மையம் என உலகமே அறியும். எனினும் சிகிரியா தொடர்பான சரியான தகவல்கள் உலகிற்கு செல்லவில்லை.

உலக புனித சுற்றுலா கலாசார மையம் என்று சீகிரியாவை பெயரிட்டாலும் அதற்கான முறையான அமைப்பு இல்லை. எனவே அதனை எப்படி செய்வது என்று விவாதிக்க வேண்டும்.

தொல்லியல் திணைக்களம் மற்றும் கலாச்சார மையம் UNICEF அதிகாரிகள் அனைவரின் பங்குபற்றலுடன் சாதகமானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாம் அனைவரும் சிகிரியாவை கோட்டை என நினைத்து சிகிரியாவிற்கு செல்கிறோம். சிகிரியா கோட்டை என்றால் ஏன் இவ்வளவு குளங்கள், அழகான மலர் தோட்டங்கள் இருக்கின்றன?

எனவே, சிகிரியா ஒரு கோட்டை அல்ல, அது ஒரு அழகான ஓய்வு பூங்கா. பேராதனை போலவே, இது அழகிற்காகவும், ஓய்வெடுக்கவும் கூடிய இடமாகும்.

பண்டைய காலத்தில் மன்னரால் கட்டப்பட்ட ஓய்வு பூங்காவாகும். இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...