Date:

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளமின்றிய விடுமுறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்தின் விதிகள் அர நிறுவனங்கள் சட்டபூர்வ அமைப்புகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் பொருந்துமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயணிக்கும் அரச ஊழியர்கள் மாதாந்தம் குறிப்பிட்ட தொகையினை  நாட்டுக்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஊழியர் தற்காலிகமாக சேவையில் இருந்து விலகும் பட்சத்தில் குறித்த சேவையினை முன்னெடுப்பதற்கு ஊழியர் ஒருவரை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும் நிலையில் மாத்திரமே விடுமுறை பரிசீலிக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த வெற்றிடத்திற்கு புதிதாக ஒருவரை இணைத்துக்கொள்வதற்காக சாத்தியம் இல்லை எனவும் குறித்த சுற்றுநிருபத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...