மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
திருமண வீடொன்றுக்கு சென்றுவீட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சாரதி மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் பயணித்த அதிசொகுசு கார் மீகொடை- கஜூகஹயடதெணிய பகுதியில் வைத்து வீதியிலிருந்து விலகி வீடொன்றின் மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.