Date:

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து- இரண்டு பேர் காயம்

மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண வீடொன்றுக்கு சென்றுவீட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சாரதி மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் பயணித்த அதிசொகுசு கார் மீகொடை- கஜூகஹயடதெணிய பகுதியில் வைத்து வீதியிலிருந்து விலகி வீடொன்றின் மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...