Date:

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து- இரண்டு பேர் காயம்

மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண வீடொன்றுக்கு சென்றுவீட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சாரதி மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் பயணித்த அதிசொகுசு கார் மீகொடை- கஜூகஹயடதெணிய பகுதியில் வைத்து வீதியிலிருந்து விலகி வீடொன்றின் மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று வேலை நிறுத்திய மருத்துவர்கள்!

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை...

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில்…

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர்  என...

கம்மன்பில CID முன்னிலையில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப்...

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373