Date:

மிளகாய் பொடியை எறிந்துவிட்டு தங்கச் சங்கிலி அபகரிப்பு

குடியிருப்புக்கு பின்னால் இருந்த சமயலறையில் வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலி இனந்தெரியாத நபரொருவரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை எறிந்துவிட்டு அதனை களவாடி சென்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் (17) நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை எறிந்துவிட்டு தங்க சங்கிலியை இனந்தெரியாத நபர் அபகிரித்துச் சென்றுள்ளார். இதன்போது பெண் கூச்சலிட அயலவர்களும் ஓடி வந்து திருடனை தேடியபோது அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு சந்தேக நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை; அமர்வில் பதற்றம்

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து,...

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கான தேர்தல் இன்று

கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான...

ஈரான் எடுக்கும் முடிவு…

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும்...

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373