கொழும்பில் இன்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
உரிமைக்காக கொழும்புற்கு செல்வோம் எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது .
இதன்படி, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை விடுதலை செய்தல், வாழ்வதற்குத் தேவையான நிவாரணங்களை வழங்குதல், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடாத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.