திருத்தப்பட்ட உள்ளூர் அஞ்சல் கட்டணங்கள் நாளை (15) முதல் அமுலாக்கப்படவுள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 15 ரூபாவாக காணப்பட்ட சாதாரண அஞ்சல் கட்டணம் 50 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் சலுகை கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது. 20 கிராமுக்கு 12 ரூபாவாக காணப்பட்ட குறித்த கட்டணம் 30 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதிவுத் தபால் கட்டணம் 30 ரூபாவிலிருந்து 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தினால் பொறுப்பேற்கப்படும், கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களுக்கு இடையிலான கடிதங்களுக்கான கட்டணம் 12 ரூபாவிலிருந்து 30 ருபாவாக திருத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காசுக்கட்டளை, பொதிகள் சேவை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.