Date:

மாணவனை கடுமையாகத் தாக்கிய அதிபர் தலைமறைவு-உடந்தையாக இருந்த ஆசிரியை கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றில் 5ஆம் ஆண்டு மாணவன் ஒருவன் கடுமையாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த மாணவனைத் தாக்கிய பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் உடந்தையாக இருந்த ஆசிரியையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுவருதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலுக்கு உள்ளான மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையின் மேல் மாடிக்கு அழைத்துச் வெல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அதிபர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு இனவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

அருவக்காலு குப்பை திட்டத்துக்கு எதிரான புத்தளம் மாநகர சபையின் உறுதியான தீர்மானம்

புத்தளம் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அருவக்காலு தின்மக்கழிவு செயற்திட்டத்திற்கு...

மீண்டும் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் இன்றும்...