நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை A7 பிரதான வீதியில் இன்று காலை நானுஓயா பிலக்பூல் சந்தியில் மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – மீபிலிமான நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்க ளுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் மண்சரிவினால் நுவரெலியா பிரதான நகருக்கு தொழிலுக்கு செல்பவர்கள் பாரிய அசௌகரியம் முகம் கொடுத்து நடந்து செல்வதையும் அவதானிக்க முடிந்தது . தற்போது மோட்டார் சைக்கிள் செல்வதற்கு மாத்திரம் பாதை ஒதுக்கப்பட்டட்டுள்ளது
மேலும் நுவரெலியா வீதி அதிகார சபைக்கு அறிவித்து மண்மேட்டை அப்புறப்படுத் துவதற்கான வேலை ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செ.திவாகரன்