முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு கோரி, கட்டம்பே ரஜோபவனாராமாதிபதி கெப்பிட்டியகொட சிறிவிமல நாயக்க தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மீண்டும் தாய்நாட்டிற்கு வரக்கூடிய சூழலை உருவாக்கி அவருக்கு அழைப்பு விடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும் தேரர் அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.