Date:

இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ள அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் நில்வல மற்றும் களு கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, அலபத ஆகிய பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, கொட்டபொல, பிடபத்தர ஆகிய பிரிவுகளிலும் மற்றும் அக்குரஸ்ஸ, மாலிம்பட, மாத்தறை, கம்புருப்பிட்டிய, முலட்டியன மற்றும் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அடுத்த 24 மணித்தியாலங்களில் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் அவ்வழியாக பயணிக்கும் மக்களும் அவதானமாக இருக்குமாறு திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...