Date:

ஜனாதிபதி மாளிகை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த ஐவர் நுவரெலியாவில் கைது

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, களுகெலே – பொனஸ்டா பகுதியில் வைத்து நேற்று (30) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட பிடியாணையை நிறைவேற்றுவதற்காக சந்தேகநபர்களில் ஒருவரின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, ​​குறித்த வீட்டில் மேலும் நான்கு இளைஞர்கள் தங்கியிருந்ததுடன், அவர்களுக்கும் இது தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஜனாதிபதியின் இல்லத்துக்குள் நுழைந்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு வரும் நிலையில் தாங்களும் தமது நண்பரின் வீட்டிற்கு தலைமறைவாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நுவரெலியாவைச் சேர்ந்த நபரின் வீட்டில் பதுங்கியிருந்தவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...