கொழும்பு மாநகர எல்லையில் கடமைக்காக வருபவர்கள் மற்றும் கொழும்பு நகர எல்லையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பவர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமையைக் கருத்திற் கொண்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கொழும்பு நகர எல்லைக்குள் கொரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், முகக் கவசம் அணிதல், கைகளை சவர்க்காரத்தால் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.