Date:

திருமண ஆசை காட்டி ஆசிரியையிடம் பணமோசடி

பிபில-யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை    ஒருவரிடம் இருந்து 23 இலட்சத்து 30,600 ரூபாவை மோசடி செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
32 வயதான குறித்த ஆசிரியை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
கார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கூறி பல சந்தர்ப்பங்களில் 23 லட்சத்து 30,600 ரூபாவை காப்புறுதி நிறுவன முகாமையாளர் குறித்த ஆசிரியையிடம் இருந்து பெற்றுகொண்டுள்ளார்.
ஆசிரியருக்கு தெரிந்தே கடன் அட்டையை பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
காதலன் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதை அறிந்த ஆசிரியை சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...