Date:

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதி நீடிப்பு

அண்மைக் காலமாக வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதித் திகதியை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

காலாவதித் திகதிகளை நீடிப்பதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​தாங்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத் தடைகளை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உருவாக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...